Saturday 18 July 2015

Atlantis and Lemuria

Atlantis and Lemuria (குமரி கண்டம் )
மனிதனின் உண்மை வரலாறு இந்த இரண்டு பெரும் ராஜ்யங்களில் தான் புதைந்துள்ளது என பல வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர் .
Lemuria - குமரிகண்டம்
லெமுரியா நமது இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள குமரிக்கண்டமே என்றும் ஆதி நாகர் இனம் தோன்றி செழிப்பாக வாழ்ந்த இடம் இதுதான் எனவும் பாவாணர் பல ஆதரங்களுடன் தமது கருத்தை எடுத்துரைத்தார் . தென் இந்தியா ,ஆப்பரிக்கா ,இந்திய பெருங்கடல் ,ஆஸ்திரேலியா என பல இடங்களை ஒன்றிணைத்து நின்ற ஒரு பெரும் நிலா பரப்பே குமரி கண்டம் ஆகும். மொத்தம் 49 ஒன்பது நாடுகள் இருந்தன என்றும் முதல் தமிழ் சங்கம் தென் மதுரையிலும் , இரண்டாம் தமிழ் சங்கம் கபடாபுரத்திலும் நடைபெற்றது இவை இரண்டுமே கடல் கொள்ளில் அழிந்துபோயின .. குமரிக்கண்டமே படி படியான கடல் சீற்றத்தால் முற்றிலும் அழிந்து கடலில் மூழ்கியது ..பல என்னற்ற வரலாறு ,அறிவியல் பலவற்றை இழந்தோம் .. கிடைத்த சொற்ப வரலாறும் திருத்தப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன ..
Atlantis
இந்த கண்டமும் குமரிக்கண்ட காலத்தில் அறிவியலில் விளங்கி பெரும் அளவில் நிலைதிருந்தது என்றும் இது ஐரோப்பா கண்டத்திற்கும் அமெரிக்க கண்டத்திற்கும் இடையில் இருந்தது எனவும் பிரபல கிரேக்க அறிஞ்சர் பிளாடோ கூறி உள்ளார் .
இந்த Lemuria மற்றும் Atlantis பற்றிய வரலாறை காண்போம் .
தற்போதைய சிலே மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்களின் Lemuria மற்றும் Atlantis பற்றிய கருத்து ..
Lemuria மற்றும் Atlantis இவை இரண்டும் ஒரே காலத்தில் கிட்டத்தட்ட ஒரு 50000 வருடங்களுக்கு முன்பே இருந்த பெரும் சாம்ராஜ்யங்கள் . லேமுரியர்கள் ஆன்மிகத்தில் திளைத்து (ஆண்முகம் என்றால் கடவுள் நம்பிக்கை என்றல்ல சக்கரங்கள் ,யோகங்கள் ,பிரபஞ்ச ஷக்தி போன்றவற்றை உணர்ந்தவர்கள் )எந்த உயிருக்கும் பாதிப்பில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வந்தவர்கள் .அதே நேரத்தில் atlantis மக்களும் அறிவியலில் சிறந்து பெரும் அளவில் நகரங்கள் உருவாக்கி வாழ்ந்தவர்களே . Lemuria மற்றும் Atlantis இவற்றின் இடையே ஒரு சுமுகமான பந்தமே இருந்து வந்துள்ளது . அந்தே நேரத்தில் பூமியில் பல இடங்களில் சிறு சிறு சாம்ராஜ்யங்களும் இருந்தன என்றும் அதை atlantis வாழ்மக்கள் அறிவியலில் சிறந்து விளங்கம் லெமுரியா மற்றும் atlantis சாம்ராஜியங்களே அந்த சிறு இடங்களையும் மக்கள் கூட்டத்தையும் ஆளவேண்டும் என்று எண்ணினார் . இதற்க்கு லெமுரியர்கல் மறுப்பு தெரிவித்து ஒவ்வொரு இனமும் அதன் பரிணாமத்தை அதுவே மேற்கொள்ள வேண்டும் நாம் இடையில் சென்றால் அது இயற்க்கைக்கு எதிரான ஒன்றாகும் என தடுத்துள்ளனர் .
(சுருக்கமாக சொன்னால் atlantis வாழ்மக்களின் இயற்க்கை எதிர்போக்கை லேமுரியர்கள் கண்டித்ததால் போர் முண்டது )


இதுவே Lemuria மற்றும் Atlantis க்கு ஒரு பெரும் போர் உண்டாக காரணம் ஆகிற்று ..இருவரும் அணுகுண்டு களை கொண்டு மாறி மாறி தங்கிகொண்டனர் என்றும் இதன் காரணமாக பூமியின் இயற்க்கை நிலை மாறி கடல் சிற்றம் ஏற்பட்டு இரண்டு கண்டங்களும் மூழ்கின . அந்த நேரத்தில் பூமியில் poles (north pole மற்றும் south pole ) இந்த அணுகுண்டுகளின் தாக்கத்தால் இடம் மாறின எனவும் வரலாறு கூறுகிறது .. இயற்கையை பேணிகாக்க முயன்ற லெமுரியா தான் நமது குமரி கண்டம் .அந்த தாக்கத்தால் ஏற்பட்ட கடல் சீற்றம் தான் நம் குமரி கண்டம் மற்றும் தமிழ் சங்கங்களை மூழ்கடித்தது .
இந்த அழிவில் இருந்து மீண்ட சிலர் தான் நாம், ஆப்பரிக்க பழங்குடியினர் , ஆஸ்திரேலியா பழங்குடியினர் .. அந்த அட்லாண்டியர்கள் தான் ஐரோப்பா வின் வெள்ளையர்கள் .. அவர்களின் ஆதி குணம் தான் இந்த காலத்திலும் மற்ற நாடுகளை அவர்கள் கட்டுக்குள் கொண்டு வர முற்படுவது . அவர்களின் வரலாறை உயர் நிலை மேற்கத்தியர் சிலர் அறிவார்கள் .
பின்பு சிந்து சமவெளி வழி உள்ளே வந்த ஆரியர்கள் பல வரலாறை மாற்றி வைத்தனர் ஆரிய தாக்கம் ஆதி நாகர் இனத்தில் கலந்தது திராவிடம் உருவானது ,ஜாதிகள் பரப்பப்பட்டன .. இன்று வரை ஆரியரின் உண்மை வரலாறு என்னவென்று யாருக்கும் தெரியாது எங்கே இருந்து இங்கே வந்தார்கள் என்பது பெரும் கேள்விக்குறியே பலர் பல இடங்களை கூறுகிறார்கள் .இவர்களும் அட்லாண்டிஸ் வாழ் மக்களின் ஒரு இனமாக இருக்க வாய்ப்புண்டு .
இன்று வரை பூம்புகார் கடலை ஆராச்சி செய்யாமல் இருப்பதற்கான காரணம் இதுவே .. உண்மை வரலாறு வெளியே தெரிய கூடாது என்பதே காரணம் ஆகும் .
லெமுரியாவில் (குமரி கண்டம் ) வாழ்ந்த இனத்தின் இன்றைய நிலைமை இது தான் .
ஆனால் அட்லாண்டிஸ் இல் வாழ்ந்த மக்கள் ? கடல் சீற்றத்தில் தப்பி பிழைத்தவர்கள் ஐரோப்பா முழுவதும் பரவினார்கள் அவர்களே வெள்ளையர்கள் ,அமெரிக்க நிலபரப்பை கை பற்றி அங்கே இருந்த செவ்விந்தியர்களை அழித்தார்கள் .(இந்த செவ்விந்தியர்கள் குமரி கண்டத்தில் வாழ்ந்த நாகரிகம் அற்ற நாகர்கள் என பாவார் கூறுகிறார் ) . ஆஸ்திரேலிய பழங்குடி யை அழித்து அங்கும் அவர்களது ஆட்ச்சியை நிறுவினார்கள் மற்ற நாடுகளிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்து விட்டார்கள் .
50000 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் முன்னோர்கள் நினைத்த விடயங்களை இன்று அவர்கள் நிறைவேற்றி விட்டார்கள் .அதை எதிர்த்த குமரி கண்ட மக்கள் இன்று அவர்கள் காலடியில் ஒரு சிறு இனமாக உள்ளார்கள் ..